''கோவை தொகுதியில் இருந்து போட்டியிட உள்ளேன்'' - கமல்ஹாசன்

வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (13:56 IST)
''கோவை தொகுதியில் எனக்கு பெரும் ஆதரவு இருப்பதால் மீண்டும் கோவை தொகுதியில் இருந்து போட்டியிட உள்ளேன்'' என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு  நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இத்தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக கூட்டணியை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A கூட்டணியை உருவாக்கியுள்ள நிலையில் இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் I.N.D.I.A கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியும் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில் நாளை கோவையில் இந்த கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டம்  இன்று  கோயம்புத்தூரில் நடைபெறுகிறது.

இதுகுறித்து இன்று கோவையில் கமல்ஹாசன் கூறியதாவது: '' கோவை தொகுதியில் எனக்கு பெரும் ஆதரவு இருப்பதால் மீண்டும் கோவை தொகுதியில் இருந்து போட்டியிட உள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ''விக்ரம் படத்திற்கு கூட்டம் சேர்கிறது என்றால் மக்கள் நீதி மய்யத்திற்கு கூட்டம் சேராதா'' என்று கூறினார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில்,  கோவையில் போட்டியிட்டு, கமல்ஹாசன் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்