சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ராமகிருஷ்ணன் ரெட்டியின் வீட்டில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ராமகிருஷ்ணன் ரெட்டி ஒரு கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை புகார்களின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருவரின் இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடைபெறுவதால், இது ஒரே வழக்கின் அடிப்படையிலா அல்லது வெவ்வேறு வழக்குகளுக்காக நடத்தப்படுகிறதா என்பது குறித்து விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்.