150 முறை போன் செய்தும் எடுக்காத மனைவி.. 230 கிமீ பயணம் செய்து கொலை செய்த கணவர்..!

வியாழன், 9 நவம்பர் 2023 (13:55 IST)
150 முறை போன் செய்தும் தனது மனைவி போனை எடுக்காததால் 230 கிலோ மீட்டர் பயணம் செய்து மனைவியை கொலை செய்த கணவரால் கர்நாடகாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கிஷோர் என்பவர் பிரதீபா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் பிரதிபா அடிக்கடி நண்பர்களுடன் பேசுவதை கண்டித்து உள்ளார். 
 
இந்த நிலையில் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு பிரதிபா சென்ற நிலையில் சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று கிஷோர் தனது மனைவிக்கு போன் செய்தபோது அவர் வேறொருவரிடம் பேசிக் கொண்டிருந்தார். 
 
இதனை அடுத்து அவர் தொடர்ச்சியாக 150 முறை போன் செய்தும் மனைவி பதில் அளிக்காததால் ஆத்திரம் அடைந்த கிஷோர் இரவோடு இரவாக பயணம் 230 கிலோமீட்டர் பயணம் செய்து  மனைவியை கண்டித்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்ததை எடுத்து பிரதிபாவை கழுத்தை நெரித்து கிஷோர் கொலை செய்துவிட்டார். 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த கிஷோர் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவர் உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்