கடலூர் மாவட்டத்தில் வளர்ப்பு நாய் ஒன்றை கணவர் அடித்து கொன்றதால் சோகத்தில் கர்ப்பிணியாக இருந்த மனைவி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்த கணவரும் அதே கயிற்றில் தொங்கிய சோக சம்பவம் நடந்துள்ளது.
திட்டக்குடி அருகே புதுக்குளத்தை சேர்ந்த விவசாயியான கோவிந்தராஜுக்கு அவரது மனைவி வேம்பு நாய் ஒன்றை வளர்த்து வருவது பிடிக்கவில்லை. ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ள அவருக்கு நாயை இழக்க மனமில்லை. இதனால் வேம்புக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி சண்டை வந்தது.
இந்நிலையில் கோவிந்தராஜ் நாயை பலமாக அடித்து கொன்றார். இதனால் மனமுடைந்த கர்ப்பிணியான வேம்பு மாடிக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் மாடிக்கு சென்ற கோவிந்தராஜ் மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் கோவிந்தராஜ் தனது மனைவியை கயிற்றில் இருந்து கீழே இறக்கி, அவரும் அதே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.