சென்னை உள்பட 21 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை எச்சரிக்கை..!

புதன், 15 நவம்பர் 2023 (07:33 IST)
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.  

இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட 21 மாவட்ட மாவட்டங்களில் கன மழை மற்றும் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை,  கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

எனவே  மேற்கண்ட 21 மாவட்டங்களில் உள்ள நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்