மோன்தா புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வரும் நிலையில், இன்று பிற்பகல் ஒரு மணி வரை மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பகல் ஒரு மணி வரை கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வழக்கத்துக்கு மாறாக மெரினா கடற்கரை கடும் சீற்றத்துடன் காணப்படுவதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.