7 பேர் விடுதலை விவகாரம் ....ஆளுநர் நல்ல முடிவெடுப்பார் - முதல்வர் பழனிசாமி !

புதன், 19 பிப்ரவரி 2020 (14:27 IST)

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்று வரும்,நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன்  உள்ளிட்ட  7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வந்த நிலையில், இன்று சட்டசபையில்,  7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து முதல்வர் கூறியுள்ளதாவது, 7 பேரின் விடுதலையை ஆளுநரே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
 
மேலும், 7 பேரின் விவகாரத்தில் அரசு மெத்தனமாக இருப்பதாக எதிர்கட்சியைச் சேர்ந்த துரைமுருகன் பேசியதற்கு, அமைச்சர் சிவி. சண்முகம் ஆளுநரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்