பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்!

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (08:30 IST)
பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் கலந்தாய்வுக்கு தயாராகி வருகின்றனர்.
 
நீட் தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானதையடுத்து பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று முதல் தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்
 
இதன்படி இன்று அதாவது செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. முதல் கட்டமாக மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோர்களுக்கு ஆகஸ்ட் 20-ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கியது என்பதும் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25 முதல் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் நீட்தேர்வு வெளியான பின்னர் செப்டம்பர் 10-ஆம் தேதி பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் இன்று முதல் ஆன் லைனில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்