அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 51,004 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். பொதுப்பிரிவில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சகஸ்ரா மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நாமக்கல்லைச் சேர்ந்த கார்த்திகா இரண்டாம் இடத்தையும், அரியலூரைச் சேர்ந்த அமலன் ஆன்டோ மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
கலந்தாய்வு தேதிகள் குறித்து, பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 19 வரை நடைபெறும். சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 7 ஆம் தேதி தொடங்கி ஜூலை 11 ஆம் தேதி வரை நடத்தப்படும். துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21 முதல் 23 வரை நடைபெறும் என அமைச்சர் மேலும் விளக்கமளித்தார்