ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

Mahendran

திங்கள், 2 ஜூன் 2025 (16:09 IST)
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், ஐஐடி டெல்லி மண்டலத்தைச் சேர்ந்த ரஜித் குப்தா என்பவர் பொது தரவரிசைப் பட்டியலில் முதலிடம் கைப்பற்றியுள்ளார். அவர் மொத்தம் 360 மதிப்பெண்களில் 332 மதிப்பெண்களை பெறும் வெற்றி பெற்றார்.
 
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வின் மூலம் நாடு முழுவதும் உள்ள ஐஐடி உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்க்கை கிடைக்கிறது. இந்த ஆண்டின் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகள் மே 18-ஆம் தேதி நடைபெற்றது, அதில் மொத்தம் 1,80,422 பேர் பங்கேற்றனர். இதுவரை 54,378 பேர் தேர்வில் தகுதிசெய்து வெற்றிபெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் 9,404 பேர் பெண்கள் உள்ளனர்.
 
ஐஐடி டெல்லி மண்டலத்தை சேர்ந்த ரஜித் குப்தா இந்தப் போட்டியில் பொதுத்தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல், ஐஐடி கரக்பூர் மண்டலத்தைச் சேர்ந்த தேவ்தத்தா மாஜ்ஹி பெண்களுக்கான தரவரிசையில் முன்னணி இடத்தை பெற்றார். அவர் 360 மதிப்பெண்களில் 312 மதிப்பெண்கள் பெற்றதுடன், பொது தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்