அங்கு ஆரம்ப சிகிச்சைக்கு பிறகு, மேல் சிகிச்சைக்காக அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றும்போது, நேற்று நள்ளிரவில் அவர் உயிரிழந்தார்.
இந்த மரணம், கொரோனாவால் சென்னையில் பதிவு செய்யப்படும் அண்மைய மரணமாகும். இது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் தற்போது 1,010 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 69 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.