ஸ்டாலின் 70%, உதயநிதி 90%: மார்க் போட்ட எடப்பாடி பழனிசாமி

Webdunia
ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (17:51 IST)
முதலமைச்சர் முக ஸ்டாலின் 70% பொய் சொல்கிறார் என்றால் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் 90% பொய் சொல்கிறார் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.
 
 தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன
 
இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் பேசிய போது, ‘பொய் பேசுவதற்கான நோபல் பரிசை முதல்வர் முக ஸ்டாலினுக்கு கொடுக்கலாம் என பேசியுள்ளார்
 
முதல்வர் முக ஸ்டாலின் 70% பொய் பேசினால் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் 90% பொய் பேசுகிறார் என்றும் அவர் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சுக்கு திமுக தரப்பில் இருந்து என்ன பதிலடி கொடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்