தமிழகம் முழுவதும் போக்குவரத்தை அனுமதிக்கக் கூடாது – முதல்வரிடம் கூறிய மருத்துவர் குழு!

செவ்வாய், 26 மே 2020 (17:08 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை பொதுப் போக்குவரத்தை அனுமதிக்கக் கூடாது என மருத்துவர் குழு வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் மார்ச் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மூன்று முறை நீட்டிக்கப்பட்டு தற்போது மே 31 ஆம் தேதி வரையிலான நான்காவது ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தினசரி 700 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய தமிழக எண்ணிக்கை 16,000 ஐ தாண்டியுள்ளது.

இதனால் மே 31 ஆம் தேதிக்குப் பின்னரும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஐசிஎம்ஆர் துணைத் தலைவர் பிரதீப் கவூர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சென்னைத் தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையில் முக்கியமாக தமிழகம் முழுவதும் கொரோனா முழுவதும் கட்டுக்குள் வரும் வரை பொதுப்போக்குவரத்தை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் சென்னைக்கு எந்த தளர்வும் அறிவிக்கக் கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மருத்துவர்களின் முடிவை தமிழக அரசு ஏற்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்