ஸ்டாலின் தலைமையில் கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை !

செவ்வாய், 11 மே 2021 (09:39 IST)
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடி, தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க உள்ளனர். 

 
திமுக கூட்டணி நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் பின்னர் கடந்த 7 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வர் முக. ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்.எல்.ஏக்கள் 34 பேர் தமிழக அமைச்சரவையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
 
இதனைத்தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைக்கு புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுக்க விரைவில் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிக்கப்பட்ட நிலையில் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி  நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, சட்டப்பேரவை கூடும் மே 11 ஆம் தேதி (இன்று) எம்.எல்.ஏக்களுக்கு கு.பிச்சாண்டி பதவி ஏற்பு உறுதி மொழி செய்து வைப்பார்.
 
இன்று நடைபெறும், பதினாறாவது சட்டமன்ற பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10  மணிக்கு, சென்னை வாலாஜா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கலைவாணர் அரங்கம், மூன்றாவது  தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் நடைபெறுகிறது.  இதில் இன்று வெற்றிபெற்ற எம்எல்ஏக்கள் பதவியேற்க உள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்