ஜெயலலிதா எப்படி கொல்லப்படுகிறார் என சொல்லியிருப்பார்: யாரும் பார்க்க முடியாததற்கு காரணம் இதுதான்!

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2017 (10:20 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவரை, நாங்கள் பார்த்தோம், அவர் நலமாக இருக்கிறார், இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் என கதை அளந்துவிட்டது எல்லாம் பொய் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பகிரங்கமாக கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.


 
 
மதுரை பழங்காநத்தத்தில் நேற்று இரவு நடந்த அறிஞர் அண்ணா பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பல உண்மைகளை போட்டுடைத்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரை சந்திக்க ஆளுநர், மத்திய அமைச்சர்கள் உட்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு காரணம் என்ன என்பதை திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
 
ஜெயலலிதாவை சந்திக்க வருபவர்கள் அனைவரும் ஜெயலலிதா இருக்கும் அறைக்கே செல்லவில்லை. யாரையும் சசிகலா அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா அறைக்கு சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மட்டுமே செல்ல முடிந்தது.
 
ஒருவேளை ஜெயலலிதாவை நாங்கள் நேரில் சந்தித்தால் தான் எப்படி கொல்லப்படுகிறோம் என அவர் சொல்லிவிடுவார் என யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளது அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்