அதிகரிக்கும் கொரோனா தொற்று; ஒட்டன்சத்திரம் மார்க்கெட் மூடல்!

செவ்வாய், 14 ஜூலை 2020 (14:56 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பாதிப்புகள் அதிகமுள்ள மாவட்டங்களில் மட்டும் தனியாக முழு ஊரடங்குகளும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவிதமாக ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் நாளை முதல் ஜூலை 21ம் தேதி வரை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்