தினகரன் ஒரு அணுகுண்டு; ஓபிஎஸ் வெறும் யூபிஎஸ்: எச்.ராஜா காட்டம்!

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (17:50 IST)
ஆர்கே நகர் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை குறித்து பல்வேறு தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.


 
 
இந்நிலையில் இன்று மதுரை ராஜபாளையம் சந்திரப்பட்டியில் நடைபெற்ற பாஜக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது பேசிய அவர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெறுவதால் தேர்தலையே நிறுத்தக்கூடாது. ஒரு கட்சியின் வேட்பாளர் செய்யும் சட்ட விரோத செயலுக்காக தேர்தலை நிறுத்துவதற்கு பதிலாக தினகரன் போன்றவர்களை தகுதி நீக்கம் செய்யலாம்.
 
மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நிலைமை எல்லாருக்கும் தெரியும். தினகரன் அவரது முதல்வர் நாற்காலிக்கு அடியில் இருக்கும் அணுகுண்டு. தினகரன் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் ஓபிஎஸ் வெறும் யூபிஎஸ் ஆகிவிடுவார் என தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்