தெய்வதிரு வடிவேல் மறைவு... நேரில் சென்று அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறி 2 லட்சம் நிதியுதவி செய்த முன்னாள் அமைச்சர்

செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (22:00 IST)
கரூர் மாநகர் தெற்கு பகுதி, 32 வது வார்டு கழக செயலாளர் தெய்வதிரு கு.வடிவேல் அவர்களின் மறைவுக்கு முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளருமான திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர்   நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக பல்வேறு மக்கள் பணியாற்றி அயராது கழகத்திற்காக உழைத்த கரூர் மாநகர் தெற்கு பகுதி, 32 வது வார்டு கழக செயலாளர் தெய்வதிரு கு.வடிவேல் அவர்களின் மறைவுக்கு முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளருமான திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் தெய்வதிரு வடிவேல் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறி இரண்டு லட்சம் நிதியுதவி வழங்கினார்.

உடன் மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, மாவட்ட இணை செயலாளர் மல்லிகா சுப்பராயன், கரூர் தெற்கு பகுதி செயலாளர் சேரன் பழனிசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் ஆறுதல் கூறினார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்