தமிழகத்தின் இரண்டு துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!

திங்கள், 30 ஜனவரி 2023 (18:53 IST)
தமிழகத்தின் இரண்டு முக்கிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து புயலாக உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் 11 மாவட்டங்களுக்கு கன மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ஃப் விடுத்துள்ளது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி சென்னை எண்ணூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளீயாகியுள்ளது.
 
மேலும் நாளை முதல் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய்ம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்