கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றி கழக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை, த.வெ.க. தலைவர் விஜய் இன்று மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
முன்னதாக, இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அக்டோபர் 18 அன்று தலா ரூ.20 லட்சம் நிதியுதவி த.வெ.க. சார்பில் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது. விஜய் கரூருக்கு சென்று சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து நேரில் ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.