கொரோனாவை கண்டறிய நாய்களுக்கு பயிற்சி: ராணுவ கர்னல் தகவல்!

செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (21:33 IST)
கொரோனாவை கண்டறிய நாய்களுக்கு பயிற்சி
கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிய பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிய வழியாக ஒன்றை ராணுவ கர்னல் தெரிவித்துள்ளார் 
 
கொரோனா நோய் கண்டறிய நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என ராணுவ கர்னல் சுரேந்தர் சைனி அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த கொரோனா வைரஸை கண்டறிவதற்காக தமிழகத்தில் புகழ்பெற்ற சிப்பிப்பாறை நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் பயிற்சிக்குப் பின்னர் இந்த நாய்கள் கொரோனா பாதிப்பு உள்ளவர்களை கண்டுபிடித்து விடும் என்றும் கூறப்படுகிறது
 
அதிக மோப்ப சக்தி உள்ள இந்த சிப்பிப்பாறை நாய்களுக்கு தகுந்த பயிற்சி அளித்தால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவது எளிது என்றும் ராணுவ கர்னல் சுரேந்தர் சைனி அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த புதிய முறை விரைவில் நடைபெற அமலுக்கு வரும் என தெரிகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்