பரோட்டா வாங்க ஹோட்டலுக்கு படையெடுக்கும் கொரோனா நோயாளிகள்..

வெள்ளி, 17 ஜூலை 2020 (19:18 IST)
சீனாவில் இருந்து  பல்வேறு நாடிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுப் பரவி வருகிறது.  உலகளவில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்தத் தொற்றால் பாதிகப்படுள்ளனர்.

இந்தியாவில் சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்படுள்ளனர். தமிழகத்தில்  உள்ள சுமார்  1 லட்சத்திற்கு அதிகமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசு தொற்று பரவாத வண்ணம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தில் கொரோனா முகாமில் உள்ள கொரொனா நோயாளி ஒருவர் சுவர் ஏறிக் குவித்து பரோட்டா வாங்கக் கடைக்குச் சென்ற சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் மேலும் சில கொரொனா நோயாளிகள் கடைகளுக்குச் சென்று வருவதாக பலரும் புகார் தெரிவித்து வருவதால் , மக்களுக்கும் அங்கு கொரோனா தொற்று பரவுமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்