அதிமுகவின் நிலை வருத்தமளிக்கிறது: காங். எம்.பி திருநாவுக்கரசர்!

வியாழன், 28 அக்டோபர் 2021 (14:02 IST)
அதிமுகவின் தற்போதைய நிலை வருத்தமளிக்கிறது என காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்த்துள்ளார். 

 
சமீபத்தில் சசிக்கலா தன்னை அதிமுக பொதுசெயலாளர் என கூறி கல்வெட்டு வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அதிமுகவில் சசிக்கலாவுக்கு இடமில்லை என எடப்பாடி பழனிசாமியும், சசிக்கலாவை இணைப்பது குறித்து அதிமுக உறுப்பினர் குழு முடிவு செய்யும் என ஓ.பன்னீர்செல்வமும் பேசியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிமுகவிற்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
 
இந்நிலையில் அதிமுகவின் தற்போதைய நிலை வருத்தமளிக்கிறது என காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்த்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, ஆரம்ப காலத்தில் அதிமுகவுக்காக உழைத்தவன் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஜெயலலிதா அரசியலுக்கு வரும் போது அவருக்கு உறுதுணையாக இருந்தேன். 
 
ஆனால், அதிமுகவில் தற்போது நிலவும் சூழல் வருத்தம் தரக்கூடியதாக உள்ளது, அதிமுக அப்போது பிளவுபட்டதற்கும் இப்போது பிளவுபட்டு கிடப்பதும் ஒன்றா என்று காலம் தான் முடிவு செய்ய வேண்டும் என வருத்தம் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்