நாட்டையே விற்றவர் அமீர்…. ஹர்பஜன் சிங் ஆவேசம்!

வியாழன், 28 அக்டோபர் 2021 (10:11 IST)
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் மீது கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார் ஹர்பஜன் சிங்.

நடந்து முடிந்த இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் பின் விளைவுகள் இன்னும் முடிந்தபாடில்லை. சில தினங்களுக்கு முன்னர் முகமது அமீர் இது சம்மந்தமாக கருத்து பதிவிட்டார். இதனால் சீண்டப்பட்ட இந்திய வீரர் ஹர்பஜன் சிங் ‘முகமது அமீர் பந்தில் தான் சிக்ஸ் அடித்த வீடியோவை பகிர்ந்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக முகமது அமீர் ஹர்பஜன் சிங் ஓவரில் அப்ரிடி 4 பந்துகளில் 4 சிக்ஸர்கள் அடித்த வீடியோவை பகிர்ந்தார். இதனால் இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் ஹர்பஜன் சிங் ‘நான் சேற்றுக்குள் இறங்கவேண்டும் என நினைக்கவில்லை. என்னுடன் பேசும் தகுதி அற்றவர் அவர். அவர் ஒரு அவமானச் சின்னம். சுயமரியாதையையும் கிரிக்கெட்டையும் விற்றவர். ’ என அமீரை இடுப்புக்கு கீழ் அடித்துள்ளார். ஒரு விவாதத்தில் தனது குற்றத்துக்காக தண்டனை பெற்று திரும்பியவரை மீண்டும் இழிவுபடுத்தும் விதமாக பேசுவது சரிதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்