கணவன்-மனைவி இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்து, அதற்கான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், சதீஷ்குமார் தனது மனைவியிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்ததாகவும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், சதீஷ்குமார் தனது ஏழு வயது மகள் ஸ்டெஃபியை தனியாக அழைத்துக்கொண்டு, ஒரு தனியார் விடுதியில் தங்கியுள்ளார். அங்கு, மனைவியை பழிவாங்க வேண்டும் என்ற வெறியில், மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். கொலையை நிகழ்த்திய பின்னர், சதீஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதற்கிடையில், குழந்தையின் மரணத்திற்கு தாய் மற்றும் தந்தை இருவருமே காரணம் என்றும், இருவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் குழந்தையின் உறவினர்கள், ஸ்டெஃபியின் சடலத்தை வைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.