விநாயகர் சதுர்த்தியையொட்டி, நாளை அதாவது ஆகஸ்ட் 29 அன்று சென்னை மெட்ரோ ரயில்கள், சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த மாற்றத்தின்படி, ரயில்கள் வழக்கமான நாட்களை விட மாறுபட்ட கால இடைவெளியில் இயக்கப்படும்.
காலை மற்றும் மாலை நேரங்கள் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், ரயில்கள் 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
மற்ற நேரங்களில் காலை 5 மணி முதல் காலை 8 மணி வரையும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும், ரயில்கள் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.