மல்லிகைப்பூ விலை ஒரு கிலோ ரூ.2000.. விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு கிடுகிடு உயர்வு..!

Mahendran

செவ்வாய், 26 ஆகஸ்ட் 2025 (16:02 IST)
நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான பூக்கள், பழங்கள் மற்றும் பூஜை பொருட்களை வாங்க மக்கள் சந்தைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த சமயத்தில், பூக்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருப்பது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தூத்துக்குடி மலர் சந்தையில் பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, மல்லிகை பூ கிலோ ரூ.2000 வரையிலும், கனகாம்பரம் பூ கிலோ ரூ.2000 வரையிலும் விற்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், பிச்சிப்பூவின் விலையும் கிலோ ரூ.1500 வரை உயர்ந்திருப்பது, பூஜை பொருட்கள் வாங்க வந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
பூக்களின் விலை உயர்வு காரணமாக, பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தேவையான அலங்கார பொருட்களை வாங்குவதில் மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இருப்பினும், பாரம்பரிய விழாவை கொண்டாட வேண்டும் என்பதால், மக்கள் அதிக விலை கொடுத்தும் பூக்களை வாங்கி செல்கின்றனர். 
இந்த விலை உயர்வு, பூக்களின் தேவை அதிகரித்ததும், வரத்து குறைந்ததும் காரணமாக இருக்கலாம் என வியாபாரிகள் கூறுகின்றனர்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்