சென்னை மெட்ரோ ரயில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென நிறுத்தப்பட்டதால், பயணிகள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளன.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில், "தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் மெட்ரோ ரயில் சேவைகள் மட்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
ஆனால், அதே நேரத்தில் விம்கோ நகர் டிப்போவிற்கும் மீனம்பாக்கத்திற்கும் இடையிலான சேவைகள் வழக்கம் போல இயங்குகின்றன. ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்," எனத் தெரிவித்துள்ளது.