தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் குமரி கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் இன்று திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
நாளை அதாவது ஆகஸ்ட் 4 அன்று கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், ஆகஸ்ட் 5 அன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் மிக கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
ஆகஸ்ட் 6 அன்று கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 7 அன்று கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.