வைகை எக்ஸ்பிரஸ் இனிமேல் இந்த நகரில் நின்று செல்லும்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

வியாழன், 7 செப்டம்பர் 2023 (15:32 IST)
சென்னை மதுரை இடையிலான வைகை எக்ஸ்பிரஸ் இனிமேல் கூடுதலாக ஒரு நகரில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பி தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், சோழவந்தான், ஆகிய நகரங்களில் இன்று மதுரை செல்லும்,
 
இந்த நிலையில் இனிமேல் இந்த ரயில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நிற்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்