அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!

வியாழன், 7 செப்டம்பர் 2023 (08:09 IST)
இன்னும் மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட ஒன்பது மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியேற்றுள்ள அறிவிப்பில் இன்னும் மூன்று மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டதால் மேற்கண்ட மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்