பொங்கல் சிறப்பு பேருந்துகள் கிளம்பும் இடங்கள்: தமிழக அரசு அறிவிப்பு!

திங்கள், 20 டிசம்பர் 2021 (21:20 IST)
பொங்கல் சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு எந்தெந்த பேருந்து நிலையங்களில் இருந்து கிளம்பும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்த முழு தகவல் இதோ:
 
மாதவரம் பேருந்து நிலையம்: செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் மற்றும் ஆந்திர மாநிலத்தில் செல்லும் பேருந்துகள்
 
கேகே நகர் பேருந்து நிலையம்: ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர், மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள். 
 
தாம்பரம்: திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர், செல்லும் பேருந்துகள்.
 
தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம்:  திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி, திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், செல்லும் பேருந்துகள் .
 
பூந்தமல்லி பேருந்து நிலையம்: வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள்.
 
கோயம்பேடு பேருந்து நிலையம்: மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோவை, எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்