தமிழகத்தின் டாக்ஸி ஆம்புலன்ஸ் திட்டம்! – மத்திய அரசு பாராட்டு!

வெள்ளி, 21 மே 2021 (12:12 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசின் டாக்ஸி ஆம்புலன்ஸ் திட்டத்தை மத்திய அரசு பாராட்டியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாநில அரசுகளே ஊரடங்குகளை அறிவித்து கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அவ்வாறாக ஒவ்வொரு மாநிலமும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேகமாக சில வழிமுறைகளை கையாள்கின்றன.

தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் பயணிக்க ஆம்புலன்ஸ் வசதி போதாமை இருந்த நிலையில் ஆம்புலன்ஸ் டாக்ஸி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் நோயாளிகள் பலர் எளிதாக மருத்துவமனைகளை சென்றடைகின்றனர்.

இந்நிலையில் மாநில அரசுகளின் குறிப்பிடத்தக்க திட்டங்களை பட்டியலிட்டுள்ள மத்திய சுகாதார அமைச்சகம் தமிழக அரசின் டாக்ஸி ஆம்புலன்ஸ் திட்டத்தை பாராட்டியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்