தமிழில் மத்திய ஆயுதப்படை தேர்வு..! பிரதமர் மோடிக்கு ஆளுநர் நன்றி.!!

Senthil Velan

புதன், 14 பிப்ரவரி 2024 (11:52 IST)
மத்திய ஆயுதப் படைகளுக்கான ஆள்சேர்ப்பை தமிழ் மொழியில் நடத்துவதற்கு  தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து ஆளுநர் மாளிகை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், எதிர்வரும் அனைத்து மத்திய ஆயுதப் படைகளுக்கான ஆள்சேர்ப்பை தமிழ் மொழியில் நடத்த மத்திய அரசு எடுத்த முடிவு மிகவும் பாராட்டுக்குரியது எனக் கூறியுள்ளார்.
 
மேலும் தேர்வு எழுதுபவர்களின் கனவுகளை நிறைவேற்றவும், மத்திய ஆயுதப் படைகளில் அதிக பங்களிப்பை உறுதி செய்யவும், நமது பண்டைய தமிழ் மொழியை மேம்படுத்தவும் உதவும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ALSO READ: ஒரே நாடு ஒரே தேர்தல் மாதிரி காமெடியான கொள்கை இருக்க முடியுமா? – மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம்!
 
இதற்காக மாண்புமிகு பிரதமர் திரு.பிரதமர் மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி என்றும்  தமிழ் மீதான பிரதமர் மோடியின் அபரிமிதமான அன்பையும் மரியாதையையும் பிரதிபலிக்கிறது என்றும் உண்மையான உணர்வை மேலும் மேம்படுத்துகிறது என்றும் ஆளுநர் ஆர்.என் ரவி குறிப்பிட்டுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்