அதிமுகவால் அப்செட்டில் பாஜகவினர்...

புதன், 11 நவம்பர் 2020 (17:32 IST)
வேல் யாத்திரைக்கு அரசு தடை விதிப்பதால், பாஜகவினர் அதிருப்தியில் இருக்கிறார்கள் என கே.டி.ராகவன் கருத்து. 
 
தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் நவம்பர் ஆறாம் தேதி முதல் டிசம்பர் ஆறாம் தேதி வரை திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டிருந்தார். இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி அவர் வேல் யாத்திரைக்கு நடத்தி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வேல் யாத்திரைக்கு குறித்த வழக்கில் நீதிமன்றம் பாஜக தலைவருக்கு கண்டனம் தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், வேல் யாத்திரைக்கு அரசு தடை விதிப்பதால், பாஜகவினர் அதிருப்தியில் இருக்கிறார்கள். திமுக போராட்டம் நடத்த அனுமதி தரும் அரசு, பாஜகவுக்கு அனுமதி மறுப்பது ஏன்? என பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் கேள்வி எழுப்பியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்