கோவிலை திறக்க தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம்

வியாழன், 7 அக்டோபர் 2021 (16:15 IST)
கோவிலை முழுவதுமாக திறக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம். 
 
தமிழகத்தில் கொரோனா காராணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கோவில்கள் திறக்கப்பட்டிருந்தாலும் வார இறுதிகளான வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் மூடப்பட்டுள்ளது. மேலும் திருவிழாக்களும் நடத்த தடை உள்ளது. 
 
இந்நிலையில் கோவிலை முழுவதுமாக திறக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி ராமநாதபுரம், நாமக்கல், மதுரை, தஞ்சாவூர், திருச்செந்தூர் ஆகிய இடங்களில் போராட்டம் நடைபெற்றது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்