ரூ1.37 கோடி வங்கி பணத்துடன் மாயமான வேன் டிரைவர்

Webdunia
புதன், 23 நவம்பர் 2016 (17:30 IST)
பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு சொந்தமான ரூ1.37 கோடியுடன் வேன் டிரைவர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

பெங்களூருவில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இருந்து, ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்புவதற்காக ரூ1.37 கோடியுடன் வேன் ஒன்று புறப்பட்டு சென்றது. ஆனால் ஏடிஎம் மையங்களுக்கு செல்லாமல் அந்த வேன் திடீரென மாயமாகி உள்ளது.

டிரைவரே வேனை கடத்திச் சென்றாரா? அல்லது கொள்ளையர்கள் யாரேனும் வேனை கடத்தி சென்றுள்ளனரா? என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வேன் ஓட்டுநர் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை தீவிரமாக காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்