முதல்வர் குறித்து அவதூறு கருத்து: குற்றவாளிக்கு தண்டனை வழங்கிய எழும்பூர் நீதிமன்றம்!

செவ்வாய், 29 நவம்பர் 2022 (17:04 IST)
தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த சென்னையைச் சேர்ந்த நபருக்கு எழும்பூர் நீதிமன்றம் தண்டனையை அறிவித்துள்ளது.
 
சென்னை கேகே நகரை சேர்ந்த அரவிந்த் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை குறித்து அவதூறு  கருத்தை பதிவு செய்ததாக தெரிகிறது 
 
இதனை அடுத்து இது குறித்த சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் பதிவு செய்த நிலையில் இந்த வழக்கு 48 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை வழங்கப்பட்டு உள்ளது 
 
இதனை அடுத்து குற்றவாளி அரவிந்துக்கு 15 நாள் சிறை தண்டனை மற்றும் 6500  ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏற்கனவே குற்றவாளி நீதிமன்ற காவலில் இருந்ததால் அதனை கணக்கில் எடுத்துக்கொண்டு அவர் அபராதம் மட்டும் செலுத்துமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது 
 
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து 48 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து மிக விரைவில் இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்