அரியலூர் அனிதா அண்ணன் கைது: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (19:18 IST)
அரியலூர் அனிதா அண்ணன் கைது: என்ன காரணம்?
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் அண்ணன் திடீரென கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அனிதாவின் அண்ணன் அருண் குமார் என்பவர் பெரியார் நகரைச் சேர்ந்த வசந்தி என்ற பெண்ணை பைக்கில் வேகமாக வந்து அவரை அவர் மீது மோதும் வகையில் அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது
 
இது குறித்து வசந்தி தனது கணவரிடம் சொல்ல அவரது கணவர் செந்தில் ஆத்திரமடைந்து அருண்குமாரை தட்டி கேட்டார். இதனையடுத்து அருண்குமார் மற்றும் செந்தில் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது
 
இதுகுறித்து செந்தில் மற்றும் வசந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் அருண்குமார் மீது வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு செய்தனர் மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த நிலையில் நீதிமன்றம் அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்