விடுதலை ஆனதும் முதல்வேலையாக மகள் திருமணம்: நளினி கடிதம்

புதன், 21 நவம்பர் 2018 (08:14 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் 7 பேர் விடுதலை தற்போது கவர்னரின் கையில் உள்ளது. தமிழக அமைச்சரவை அனுப்பிய 7 பேர் விடுதலை குறித்த தீர்மானத்தில் இன்னும் கவர்னர் முடிவெடுக்காமல் உள்ளார்.

இந்த நிலையில் 7 பேர்களில் ஒருவராகிய நளினி ஊடகம் ஒன்றுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் விரைவில் தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என நம்புவதாகவும், 7 பேர் விடுதலை விவகாரத்தில், தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு, நன்றி என்றும் கூறியுள்ளார்.

மேலும் விடுதலைக்கு பின் முதல் வேலையாக தனது மகளுக்கு லண்டனில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக நளினி நம்பிக்கையுடன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் , தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில், அதிமுக நிர்வாகிகள் 3 பேர் விடுதலைக்கு தான் வரவேற்பு தெரிவித்துள்ளதாகவும் நளினி தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்