வெள்ளயங்கிரி மலையேறும் போது மூச்சுத்திணறல்: வழக்கறிஞர் உயிரிழப்பு

புதன், 25 மே 2022 (22:16 IST)
வெள்ளயங்கிரி மலையேறும் போது மூச்சுத்திணறல்: வழக்கறிஞர் உயிரிழப்பு
வெள்ளியங்கிரி மலை ஏறும்போது மூச்சு திணறல் ஏற்பட்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதும் அங்கு உள்ள கோயில் தற்போது பிரபலமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இளஞ்செழியன் என்பவரும் கோவை வெள்ளியங்கிரி மலை ஏறினார். அவ்வாறு அவர் மலை ஏறிக் கொண்டிருந்த போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார் 
 
நேற்றிரவு மலையேற்றத்தில் தொடங்கியவர் ஐந்தாவது மலை ஏறும் போது மயங்கி  விழுந்ததாகவும் இதனையடுத்து அவர் உயிரிழந்ததாகவும் அவருடன் சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்