பைக் சாகசம் செய்த அதே இடத்தில் வாகன விழிப்புணர்வில் ஈடுபடும் யூடியூபர்

திங்கள், 3 அக்டோபர் 2022 (14:14 IST)
தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள் என சிலர் பைக் ரேசிலும், ஸ்டண்ட் எனப்படும் சாகசத்தில் ஈடுபடும் செயல்கள் அதிகரித்துள்ளது. இதுபற்றி காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தும் ஒரு சிலர் மக்களுக்கு இடையுறு மற்றும் அச்சம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சமீபத்தில் சென்னை, அண்ணாசலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட ஐதராபாத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் கோட்லா பினோய்யின் மீது வழக்குப் பதிவு செய்து,  வாகனத்தையும் பறிமுதல் செய்து, இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த பினோய் சில நாட்களுக்கு முன் சென்னை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.

ALSO READ: மாணவிகள் முன் பந்தா காட்ட நினைத்து பைக்கில் இருந்து விழுந்த இளைஞர்! வைரல் வீடியோ

இவ்வழக்கை  இன்று விசாரித்த, நீதிபதி ஜெகதீஸ் சந்திரா, திங்கட்கிழமை மட்டும் காலை 9:30 மணி முதல்  10:30 மணி வரையிலும், மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரையிலும் பைக் ஸ்டண்ட் செய்த அதே இடத்தில் வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு, பிரசுரங்கள் வழங்க வேண்டும்; செவ்வாய் கிழமை முதல் சனிகிழமை வரை காலை 8 மணி முதல் 12 மணி ராஜிவ்காந்தி மருத்துவமனையில் வார்டு பாயாக பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

கடந்த மாதம் அண்ணா சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக, ஹைதரபாத்தை சேர்ந்த யூடியூபர் கோட்லா பினோய் பைக் சாகசத்தில் ஈடுபட்டார்.
முன்ஜாமீன் பெற்ற பினோய், நீதிமன்ற நிபந்தனைபடி, பைக் சாகசத்தில் ஈடுபட்ட தேனாம்பேட்டை சிக்னலில் வாகன விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி வருகிறார். pic.twitter.com/F5Zx6i7X2m

— மு.குணசேகரன் M.Gunasekaran (@GunasekaranMu) October 3, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்