நாகப் பாம்புக்கு நீர் வார்த்த பாசமிகு அதிகாரி – வைரலான வீடியோ

திங்கள், 24 ஜூன் 2019 (18:00 IST)
தண்ணீர் பஞ்சத்தால் மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும், பறவைகளும் கூட தாகத்தால் தவித்து வருகின்றன. பல சமூக சேவகர்களும், இயற்கை ஆர்வலர்களும் தங்களால் முடிந்த அளவு விலங்குகளின் தாகத்தை தீர்க்க சில ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தாகமாக இருந்த பாம்பு ஒன்றுக்கு அதிகாரி ஒருவர் தண்ணீர் பாட்டிலில் நீர் ஊட்டிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. தண்ணீர் தாகத்தால் தவிக்கும் நல்ல பாம்பு ஒன்று தோட்டத்தில் நின்றிருக்கிறது. அதற்கு தண்ணீர் பாட்டிலை வாயில் வைத்து தண்ணீர் ஊட்டுகிறார். அந்த நாக பாம்பும் ஒரு குழந்தையை போல அந்த தண்ணீரை வாயை திறந்து குடிக்கிறது.

இதை ட்விட்டரில் பதிவிட்ட இயற்கை ஆர்வலர் ஒருவர் “இது போன்ற காட்சியை இதற்கு முன் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டு பதிவிட்டுள்ளார்.

Forest officer offering water to a thirsty cobra.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்