ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 2 தனிப்படைகள்: மொத்தம் எட்டு!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (19:10 IST)
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரை பிடிக்க ஏற்கனவே 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
வேலை வாங்கி தருவதாக ரூ 6 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் அவருக்கு முன் ஜாமின் கிடைக்கவில்லை 
 
இதனை அடுத்து அவர் தலைமறைவாகி உள்ளார். இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி பிடிக்க ஏற்கனவே 6 தனிப்படைகள் அமைத்து அதில் இருந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மொத்தம் 8 தனிப்படைகள் அவரை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்