பொளந்து கட்டும் மழை... இந்த 6 மாவட்டகாரர்களே உஷார்...!!

திங்கள், 9 நவம்பர் 2020 (09:37 IST)
தமிழகத்தில் மேலும் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆம், தமிழகத்தில் நிலவும் காற்றின் திசைவேகம் மாறுபாட்டினால் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என  தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொருத்த வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிட லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்