உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6.6 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு..26 லட்சம் வேலைவாய்ப்பு- முதல்வர்

Sinoj

திங்கள், 8 ஜனவரி 2024 (20:29 IST)
தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6.6 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, பல்வேறு மக்கள நலத்திட்டங்கள், மாநில வளர்ச்சி, வேலைவாய்ப்புக்கு  என  பல அறிவிப்புகள் வெளியிட்டு செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில்,  ஜனவரி 7, மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னை- நந்தனம்பாக்கத்தில் உள்ள வர்த்தகக் மையத்தில் நேற்று முதல் உலக முதலீட்டாளர்கள்  மாநாடு நடைபெற்று வருகிறது.

இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் தமிழகத்தில் பல ஆயிரம் கோடியில் முதலீடு செய்து, அரசுடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதுடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில்,  தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மா நாட்டில் 6.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்தி என் இதயத்தில் இடம் பிடித்துவிட்டார் டி.ஆர்.பி ராஜா. அமைச்சராகப் பொறுப்பேற்று குறுகிய காலத்தில் சாதனை படைத்துவிட்டார் என்று பாராட்டியுள்ளார்.

மேலும், இரண்டு நாள் உலக முதலீட்டாளர்ககள் மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் 26 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இந்த மாநாட்டில் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸாலின் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்