ஊரடங்கு முடிவதும் தொடர்வதும் 29 ஆம் தேதியே தெரியும்: முதல்வர் பதில்!

வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (11:06 IST)
ஊரடங்கு தொடர்வது குறித்தும் இ-பாஸ் நடைமுறை குறித்தும் 29 ஆம் தேதி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என முதல்வர் தகவல். 

 
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் அனலாக் 1, 2, 3 ஆகியவைகளில் ஏகப்பட்ட தளர்வுகளை மத்திய மாநில அரசு அறிவித்துள்ளது.  
 
இதன் காரணமாக கடைகள், ஜிம்கள் திறக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பிவிட்டதாகவே கருதப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் இன்னும் ஊரடங்கு, இ-பாஸ் நடைமுறையை ஆகியவை இருப்பதால் அடுத்து என்னவென்பது தெரிவில்லை. 
 
எனவே, 29 ஆம் தேதி ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெறும். இதன் பின்னர் செப்டம்பர் மாதமும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? இ=பா ரத்து செய்யப்படுமா அல்லது அமலில் இருக்குமா என்பது குறித்து அறிவிக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்