திருப்பூரில் 26 வங்கதேசத்தினர் கைது.. போலி ஆதார் அட்டை பெற்று வேலை பார்த்ததாக தகவல்..!

Siva

வெள்ளி, 20 ஜூன் 2025 (07:51 IST)
இந்தியாவின் பல பகுதிகளில் வங்கதேசத்தினர் ஊடுருவி வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில், திருப்பூரில் 26 வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அவர்களிடம் போலி ஆதார் அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திருப்பூர், பல்லடம், அவிநாசி போன்ற பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், வங்கதேசத்தை சேர்ந்தவர்களும் போலி ஆதார் அட்டைகள் மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் புகுந்து திருப்பூர் பகுதியில் வேலை செய்து வருவதாக உளவுத்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
 
இதனை அடுத்து, திருப்பூரில் உள்ள முக்கிய பகுதிகளில் சோதனை செய்தபோது, 26 பேர் வங்கதேசத்தினர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் போலி ஆதார் அட்டை இருந்ததும், அதை வைத்து பனியன் நிறுவனத்தில் வேலை பெற்று பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இவர்களை அடுத்து, அவர்களை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
"வேலைக்கு வருபவர்களிடம் நாங்கள் ஆதார் அட்டை நகல் வாங்கித்தான் வேலை தருகிறோம். ஆனால், அந்த அட்டை போலியானது என்று எங்களுக்கு தெரியாது. இது குறித்து அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று திருப்பூர் தொழில் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்