இலங்கையில் இருந்து மேலும் இரு அகதிகள்: மயக்க நிலையில் இருந்ததாக தகவல்!

திங்கள், 27 ஜூன் 2022 (09:40 IST)
இலங்கையில் இருந்து மேலும் இரு அகதிகள்: மயக்க நிலையில் இருந்ததாக தகவல்!
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அந்நாட்டில் வாழ வழியில்லாமல் தமிழகத்துக்கு அகதிகளாக வரும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
 
இந்தநிலையில் இலங்கையில் இருந்து மேலும் 2 பேர் அகதிகளாக தமிழகம் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகி விட்டன. இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த தம்பதிகள் இருவரும் மயக்க நிலையிலிருந்ததை அடுத்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு அதன் பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து தனுஷ்கோடி வந்த இலங்கை தம்பதியிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்