17 தமிழ்நாடு மீனவர்கள் மீண்டும் சிறைபிடிப்பு: தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்..

Siva
வியாழன், 8 பிப்ரவரி 2024 (06:54 IST)
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது கடந்த பல ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வரும் நிலையில் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க மீனவர் பிரதிநிதிகள், மீனவர் சங்கங்கள் மத்திய மாநில அரசை கோரிக்கை விடுத்து வருகின்றன.

ஆனால் மீனவர்கள் கைது செய்து செய்யப்படுவதும் இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை விடுதலை செய்ய முயற்சிப்பதும் ஆன நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.

இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மீண்டும் 17 தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில் அவர்களை விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டு வருகிறது.  

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்